உக்ரைனில் இந்திய தேசியக் கொடிக்கு மரியாதை!

– நாடு திரும்பியவர் நெகிழ்ச்சி

திருப்பூர் திருமுருகன்பூண்டியைச் சேர்ந்த வெள்ளியங்கிரி என்பவர் கட்டட ஒப்பந்ததாரராக பணிபுரிகிறார். இவரது மகன் ஸ்ரீதர் உக்ரைனில் மருத்துவப்படிப்பு படித்து வந்தார். அவர் அங்கிருந்து மத்திய அரசின் உதவியுடன் நேற்று திருப்பூர் வந்தார்.

இந்நிலையில் நாடு திரும்பிய நிலவரம் குறித்து விளக்கமளித்த அவர், “உக்ரைன் வடக்கு பகுதியில் பெரிய பாதிப்பு இல்லை. நம் நாட்டுக்கு வருவதற்கான முயற்சி மேற்கொண்டபோது, இந்தியத் துாதரக உதவியால், பாதுகாப்புடன் வெளியேற அனுமதிக்கப்பட்டோம்.

நான் வசித்த பகுதியில் இருந்து 40 பேர் உட்பட 500 பேர் பேருந்தில் உக்ரைனில் இருந்து அண்டை நாடான ஹங்கேரிக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.

அங்கு காத்திருந்த இரண்டு விமானங்களில் டெல்லிக்குப் பாதுகாப்பாக அழைத்து வந்தனர். உக்ரைனில் நம் நாட்டு தேசியக் கொடியை காட்டினால், மரியாதை கொடுக்கின்றனர். இந்தியர்களுக்கு தேவையான உதவி செய்கின்றனர்.

பிரதமர் மோடியின் முழு முயற்சியால் நாங்கள் உயிருடன் நாடு திரும்பி உள்ளோம். மத்திய, மாநில அரசுகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறினார்.

07.03.2022 6 : 30 P.M

You might also like