12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5-ம் தேதி தொடக்கம்!

– அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், இந்தாண்டு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கமளித்தார்.

அப்போது பேசிய அவர், “12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் 5-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை நடைபெறும்.

11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் 9-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெறும்.

10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் 6-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறும்.

10, 11 மற்றும் 12 -ம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25 -ம் தேதி தொடங்குகிறது.

மாணவர்கள் பதற்றம் அடையாமல் தேர்வை எதிர்கொள்ளவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

02.03.2022 12 : 30 P.M

You might also like