என்னை செதுக்கிய 23 ஆண்டுகள்!

‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழாவில் ஸ்டாலின் பேச்சு

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பள்ளி, கல்லூரியில் படித்த காலம், இளமை காலம், அரசியல் ஆர்வம், முதல் அரசியல் கூட்டத்தில் பங்கேற்பு, முதல் பொதுக் கூட்ட பேச்சு,

திரைத்துறையில் கால் பதித்தது, திருமண வாழ்க்கை, மிசா காலம் என 1976 ஆம் ஆண்டு வரையில் 23 ஆண்டுகள் நிகழ்ந்த வாழ்க்கை பயணத்தை சுயசரிதை புத்தகமாக எழுதியுள்ளார்.

இந்த புத்தகத்திற்கு ‘உங்களில் ஒருவன்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இதன் முதல் பாகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது.

விழாவுக்கு திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்கினார்.

திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி முன்னிலை வகிக்கிறார். திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி வரவேற்று பேசினார்.

உங்களில் ஒருவன் புத்தகத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. வெளியிட்டார்.

இந்த விழாவில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

விழாவில் நூல் ஆசிரியரான முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்புரை நிகழ்த்தி பேசுகிறார்.

இந்த விழா அழைப்பிதழில் “எனது 23 வயது வரையிலான வாழ்க்கைதான் இந்த புத்தகம். 1953 மார்ச் 1 அன்று நான் பிறந்தேன். 1976 பிப்ரவரி 1 அன்று மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன்.

இதற்கு இடைப்பட்ட ஆண்டுகளில் நடந்த வரலாற்று சுவடுகளை ‘உங்களில் ஒருவன்’ முதல் பாகமாக எழுதி இருக்கிறேன்” என்று கூறினார்.

You might also like