களப்பணியாளர்களின் சேவைக்குத் தலை வணங்குகிறேன்!

– முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

“மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் சேவைக்குத் தலை வணங்குகிறேன்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “தொடர் மழை, அளவுக்கு அதிகமான நீர்வரத்து காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் துயர் துடைக்கப் பணியாற்றும் காவல் துறையினர், மின் துறையினர், தூய்மை பணியாளர்கள், மருத்துவத் துறையினர் என, நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள, அனைவரது சேவைக்கும் தலை வணங்குகிறேன்.

தன்னலம் பாராத உங்களது சேவையாலும், தியாகத்தாலும், கோடிக்கணக்கான மக்களின் துயர் துடைக்கப்படுகிறது. இயல்பு நிலை முழுமையாக விரைந்து திரும்ப, அனைவரும் சேர்ந்து உழைப்போம்; மக்களைக் காப்போம்.

உங்களின் தியாகம் விலை மதிப்பில்லாதது. உங்கள் சேவை மகத்தானது. உங்கள் உள்ளத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

You might also like