ஸ்மார்ட் சிட்டி முறைகேடு பற்றி விசாரணை: மு.க.ஸ்டாலின்!

சென்னையில் பெரு மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மூன்றாவது நாளாகப் பார்வையிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது முன்னாள் அமைச்சர் வேலுமணி பற்றிக் கேள்வி எழுப்பப்பட்டபோது, “அவர் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றவர், “சென்னைக்கான ஸ்மார்ட் சிட்டி விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், விசாரணை நடத்தி அது குறித்து விசாரித்து, ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் அடுத்து இரு நாட்களில் 20 செ.மீ. அளவு மழை பெய்தாலும், அதை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார் தமிழக அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்.

You might also like