வெற்றி பெற்றார் மம்தா!

மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பவானியூர் தொகுதியில் போட்டியிட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா வெற்றி பெற்றிருக்கிறார். இதன் மூலம் அவருடைய முதல்வர் பதவி உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது.

ஏற்கனவே நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த மம்தா, அதற்குப் பின்னால் சதி இருப்பதாகச் சொல்லியிருந்தார்.

தற்போது 58 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிற மம்தா தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

இன்னும் இடைத்தேர்தல் நடந்த இரண்டு தொகுதிகளிலும் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகித்த நிலையில் இருக்கிறது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்ற மம்தாவுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். மற்ற கட்சித் தலைவர்களும் அவருக்கு வாழ்த்தைத் தெரிவித்து வருகிறார்கள்.

You might also like