கொரோனா: தமிழகத்தில் குழந்தைகள் பாதிப்பு உயர்வு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

அதன்படி, தமிழகத்தில் நேற்று 1,624 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 62 ஆயிரத்து 177 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 17,192 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,51,678 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 1,639 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 09 ஆயிரத்து 435 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 35,550 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று மேலும் 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 12 வயதுக்கு உட்பட்ட 102 குழந்தைகளுக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 270 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் குழந்தைகள் பாதிப்பு நேற்று உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like