புதுவையிலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் பாஜக!

நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு இதுவரை புதுச்சேரியில் இருந்து பா.ஜ.க. சார்பில் யாரும் தேர்ந்தெடுக்கப்பட்டது இல்லை.

இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் இருந்து மாநிலங்களவைக்கு பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட எஸ்.செல்வகணபதி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையொட்டி பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “புதுச்சேரியில் இருந்து நமது கட்சியைச் சேர்ந்த எஸ்.செல்வகணபதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இங்கிருந்து நமது கட்சியைச் சேர்ந்த ஒருவர் முதன் முதலாக மாநிலங்களவை எம்.பி.யாகி இருப்பது பா.ஜ.க. தொண்டர் ஒவ்வொருவருக்கும் மகத்தான பெருமை அளிப்பதாகும்.

புதுச்சேரி மக்கள், எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையால் நெகிழ்ச்சி அடைகிறோம். புதுச்சேரியின் வளர்ச்சிக்காக நாங்கள் தொடர்ந்து உழைப்போம்” எனக் கூறியுள்ளார்.

இதேபோல் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மத்திய அமைச்சர் எல்.முருகனும், அசாம் மாநிலத்தில் இருந்து சர்வானந்தா சோனாவாலும் பா.ஜ.க. சார்பில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

You might also like