நினைவுநாளில் உடைக்கப்பட்ட காந்தி சிலை!

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் இருந்த காந்தி சிலை சரியாக அவருடைய நினைவுநாளில் உடைக்கப்பட்டிருக்கிறது.

கோட்ஸேக்கு வாரிசுகள் பல இடங்களிலும் இருக்கிறார்கள். முன்பு அவருடைய உடலைச் சிதைத்தார்கள். இப்போது அவருடைய சிலைகளைத் தகர்க்கிறார்கள்.

தன்னுடைய வாழ்க்கையைச் செய்தி என்று வெளிப்படையாகத் தன்னைப் பற்றி சொல்லிவிட்டுச் சென்ற காந்தி மீதான குரோதம் காலம் கடந்தும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

காந்தியை இதைவிட எதிர்மறையாக அவருடைய நினைவுநாளில் நினைவுபடுத்திவிட முடியாது.

-யூகி

30.01.2021   2 : 30 P.M

You might also like