எல்லாப் பக்கங்களிலும் பாதை உண்டு!

ஒரு பாறையில் ஒரு கூழாங்கல்லில் ஒரு மணல் பரலில் நுழைய விரும்பினேன்; கதவைத் திறக்கச் சொல்லிக்
கெஞ்சினேன்; “எல்லா பக்கங்களிலும் நாங்கள் திறந்தே இருக்கிறோம்” மூன்றுமே சொல்லின; எல்லாப் பக்கமும் திறந்த வீட்டுக்குள் நுழையத் தெரியாத திகைப்பில் வெளியே நிற்கிறேன் இத்தனை காலமும்!
– கல்யாண்ஜி

‘பதில் அன்பு’ என ஏதுமில்லை!

நான் அறிந்த வரையில் இந்தப் பூமியில் ‘அன்பு’ என்ற ஒன்றுதான் உண்டு; ‘பதில் அன்பு’ என ஏதுமில்லை;
மலர்கள் தரும் செடிக்கு பதில் மலர்கள் தர யாரால் இயலும்? – மனுஷ்ய புத்திரன்

முகத்தில் அறையும் அரசியல் கவிதைகள்!

நா.வே. அருள் காலம் உருவாக்கிய கலைஞன். சதா முற்போக்கு எண்ணத்தோடு ஒரு மனிதனால் வாழமுடியும் என்பதற்கு உதாரணம் அருள்.

போர்வாளால் சவரம் செய்யவேண்டாம்!

என்னைப் பொறுத்தவரை கவிதையும் சித்திரமும் ஒன்றை ஒன்று விழுங்கிக் கொள்ளும் இரண்டு பாம்புகள். ஒரு ஓவியனின் மகனாகப் பிறந்த நான் அடிப்படையில் ஒரு ஓவியன்தான்.

சொல்லாதது…!

பேச ஆரம்பித்ததும் தூறல். சிமிண்டுத் தாழ்வாரத்தின் கீழ் ஒதுங்கியிருந்தோம். அந்தரத்தில் எவ்வளவு காலம் நிராதரவாயிருந்து மண் தொடுகிறது மழைத்துளி.

பால்யத்தின் சிறகுகள் உதிர்ந்த தருணம்!

எல்லோரும் ஒரு காலத்தில் குழந்தையாக இருந்தாலும் வளர்ந்தபின் தொலைந்து விடுகிறது
குழந்தைகளின்உலகத்தைத் திறக்கும் சாவி!