தத்தித்தோம், ஜாதி மல்லிப் பூச்சரமே, சங்கீத ஸ்வரங்கள், மழையும் நீயே உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் பாடல்களைத் தந்தவர் இசையமைப்பாளர் கீரவாணி.
இவருடைய ‘அழகன்’ படப் பாடல்கள் ரசிகர்களை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் விதத்தில் இருக்கும்.
ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருதுகள் பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி அளித்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி.
கேள்வி: என்ன சார்.. அந்த இரண்டு முக்கியமான விருதுகளும் ஷோ கேஸில் இல்லையே?
கீரவாணி பதில்: பீரோவுக்குள் வைத்துப் பூட்டிவிட்டேன். பார்வையில் படும்படி அலங்காரமாக வைத்தால் அதைப் பார்க்கும் போதெல்லாம், மனதில் இனி என்ன சாதிக்க இருக்கிறது என்று ஒரு நிறைவும், சோம்பேறித்தனமும் வந்துவிடும்.
மேன்மக்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்களில் ஒன்று இது.
– நன்றி: முகநூல் பதிவு