தமிழகத்தில் அடுத்தடுத்து நடக்கும் தொடர் என்கவுண்டர்கள்!

செய்தி:

சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே ஒருவர் போலீசாரால் என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து சீசிங் ராஜா என்பவர் அதே என்கவுண்டரால் கொல்லப்பட்டிருக்கிறார். தற்போது வரை இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என்கவுண்டரில் கொலை செய்யப்படுவது ‘தற்செயலாக’ நடப்பதுபோல் நடந்து கொண்டே இருக்கிறது.

கோவிந்த் கமெண்ட்:

இந்த செய்திகளைத் தொடர்ந்து பார்க்கும்போது இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய ‘காக்க காக்க’ படத்தின் அடுத்தடுத்த பாகங்களை நேரடியாக நம் கண்ணுக்கு முன்னால் பார்ப்பது போலிருக்கிறதே!

#ஆம்ஸ்ட்ராங்_கொலை_வழக்கு #சீசிங்_ராஜா_என்கவுண்டர் #இயக்குனர்_கௌதம்_மேனன் #armstrong_murder_case #rowdy_cheasing_raja- #cheasing_raja_encountered #director_gowtham_menon #encounter

You might also like