தவறுகளிலிருந்து கற்ற பாடம்!

- ராஜீவ்காந்தி

அருமை நிழல் :

மறைவதற்கு முன்னால் குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம். போக்குவரத்தை நிறுத்தியிருக்கிறார்கள். கடந்து போகும் ராஜீவ்காந்தியிடம் இதய நோயாளியான ஒருவர் சொல்கிறார்.

“கடந்த இரண்டு மணி நேரமாகப் போக்குவரத்தை நிறுத்திவிட்டதால், இதய நோயாளியான என்னை இவ்வளவு நேரமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள்” என்று சொன்னதும், அந்த மனிதரின் கைகளைப் பற்றிக் கொள்கிறார் ராஜீவ்.

மன்னித்துக் கொள்ளுங்கள்-அவரிடம் மன்னிப்புக் கேட்கிறார். உடன் வந்திருந்த பத்திரிகையாளர்களிடம் மெதுவாகச் சொல்கிறார்.

“என்னுடைய தவறுகளிலிருந்து நான் பாடம் கற்றுக் கொண்டேன். மக்களுடன் நான் கொண்டிருக்கும் தொடர்பை ஒருபோதும் நான் இழக்கக் கூடாது”

1991 மார்ச் மாதம் குஜராத்தில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியபோது ராஜீவ்.

#rajeev_gandhi #rajeev #gujarat #ராஜீவ்காந்தி #குஜராத்

You might also like