சக கலைஞர்களுக்கு அர்ப்பணம்!

விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமான், நித்யா மேனன் நெகிழ்ச்சி

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன்-1 படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமானுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

இதுகுறித்து ஏ.ஆர்.ரகுமான் கூறும்போது, ”எனக்கு தேசிய விருது கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விருதை சவுண்ட் என்ஜினியர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்” என்றார்.

இதேபோல், திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன் கூறும்போது, “திருச்சிற்றம்பலம் படத்துக்காக எனக்கு விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

எந்த சாதனையும் தனிப்பட்ட நபருடையது அல்ல. ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்திற்கு நிறைய பேர் தங்களின் உழைப்பை கொடுத்துள்ளனர். இப்படி உழைப்பை கொடுத்தவர்களுக்கும் எனது கதாபாத்திரம் மீது அன்பை பொழிந்த அனைவருக்குமானது இந்த விருது” என்றார்.

You might also like