சாதித் தடைகளைக் கடக்க வேண்டியவர்கள் பெண்கள்!

நூல் அறிமுகம்:

சமீபத்தில் வெளிவந்த தலைசிறந்த நாவல்களில் ஒன்று நரவேட்டை நூல். புத்தகக் கண்காட்சியில் வாங்கிய போதும் இப்போதுதான் படிக்க முடிந்தது. சாதிய பாகுபாடுகளை, சாதிய பண்பாட்டை, சாதி ஆணவக் கொலையை மிகக் கச்சிதமாக வெளிப்படுத்துகிறது நாவல்.

சாதி வெறி, ஆணவக் கொலைகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான நிலைபாடும், தலையீடும் உண்மையை உரக்கச் சொல்லும் வகையில் நடத்திய போராட்டங்களை, எடுத்த முயற்சிகளை உள்ளது உள்ளபடி சொல்லப்பட்டு இருக்கிறது.

பெண்கள் தான் சாதித் தடைகளைக் கடந்து துணிச்சலாக தங்கள் காதலை வெளிப்படுத்துவதுடன் அதை வெற்றிகரமாக திருமணத்தில் முடிப்பதிலும் முனைப்புடன் இருக்கின்றனர் என்ற அனுபவம் இத்தகைய பல திருமணங்களில் எனக்கே உண்டு.

அது மிகச் சிறப்பாக நாவலில் வெளிப்பட்டு இருக்கிறது. கூறியது கூறல், மிகைப்படுத்துதல், அதீதமான வர்ணனைகள் போன்ற குறைகள் எதுவும் இல்லாமல் சிறந்த, காலத்திற்கு தேவையான நாவலாக வந்துள்ளது நரவேட்டை.

நாவலாசிரியர் சக்தி சூர்யாவிற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். பாரதி புத்தகாலயம் சிறந்த முறையில் அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். வாங்கிப் படியுங்கள்.

– சண்முகம் பெருமாள்

  • நன்றி: முகமது சிராஜுதீன் முகநூல் பதிவு

*****

நூல்: நரவேட்டை
ஆசிரியர்: சக்தி சூர்யா
பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்: 280
விலை: ரூ.280/-

You might also like