எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேரளாவில் கைது!

சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் தொடர்பான மோசடி வழக்கிற்காக கடந்த சில மாதங்களாகவே தேடப்பட்டு வந்தார் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான எம்.ஆர். விஜயபாஸ்கர்.

தொடர்ந்து தலைமறைவான போதும் அவருக்காக முன் ஜாமீன் வாங்குவதற்கான முயற்சிகள் நடந்தன. ஆனால் நீதிமன்றம் அதை நிராகரித்துவிட்டது.

இந்நிலையில் தொடர்ந்து தேடப்பட்டு வந்த அவர், தற்போது கேரளாவில் கைது செய்யப்பட்டு, அங்கிருந்து கரூருக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார். சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

You might also like