பிடிவாரண்ட்டுக்கு மதிப்பளித்து பிடிபடுவாரா மல்லையா?

கோவிந்த் கேள்வி:

பல வங்கிகளில் வாங்கிய கடன்களைத் திருப்பி செலுத்தாத விவகாரத்தில்பல ஆண்டுகளுக்கு முன்னால் வெளிநாட்டிற்கு போய்விட்ட தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக இதுவரை பலமுறை பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால், பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டாலும் விஜய் மல்லையா பிடிபடவில்லை.

இத்தனைக்கும் கடந்த வாரத்தில் லண்டனில், விஜய் மல்லையாவின் மகனுக்கு ஆடம்பரமான முறையில் திருமணம் நடந்திருக்கிறது.

திருமணம் நடந்த ஒரு வாரத்தில் மறுபடியும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

இப்போவாவது பிடிபடுவாரண்ட்டுக்கு மதிப்புக் கொடுத்து பிடிபடுவாரா விஜய் மல்லையா?

You might also like