அரசியல்வாதிகள் விருப்ப ஓய்வு அறிவித்தால் எப்படி இருக்கும்?

செய்தி:

தமிழக சட்டசபையில், “டாஸ்மாக் மதுபானத்தில் ‘கிக்’ இல்லை” என்று பேசி இருக்கிறார் தமிழக அமைச்சரான துரைமுருகன்.

கோவிந்த் கேள்வி:

அண்மையில், தமிழக அமைச்சரவையில் வயதில் மூத்த அமைச்சரான பொன்முடி, ஓசி பஸ்ஸில் போறீங்களா என்று பெண் பயணிகளிடம் கேட்டு, அது சலசலப்பை ஏற்படுத்தியது. அது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தூங்கவிடாமல் செய்தது. தற்போது மூத்த அமைச்சரான துரைமுருகன், சட்டசபையில் டாஸ்மாக் போதை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.

டி-20 உலகக் கோப்பைக் கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்றதும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா என மூவரும் சர்வதேச டி-20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அதைப்போல அரசியலில் இருப்பவர்களுக்கு ஒய்வு பெறுவதற்கான வயது வரம்பு இருந்தால் எப்படி இருக்கும் என்கிறார்கள் சில சாமானியர்கள்.

வயதில் முதிர்ச்சியுடன் இருந்தாலும் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசும் மூத்த அமைச்சர்களுக்கெல்லாம் விருப்ப ஓய்வு கிடையாதா?

You might also like