தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி திடீர் டெல்லி பயணம்!

தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம் தொடர்பான சாவுகளின் எண்ணிக்கை 62-ஆக உயர்ந்ததை அடுத்து தொடர்ந்து பல்வேறு எதிர்ப்புச் சம்பவங்கள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.

பாஜகவினர் தொடர்ந்து அதுகுறித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பல்வேறு கட்சியினர் கள்ளக்குறிச்சிக்குச் சென்று விமர்சித்து வரும் நிலையில், தமிழக பாஜகவினர் சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை ராஜ்பவனில் சந்தித்து கள்ளக்குறிச்சி தொடர்பாக சில கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லிக்குப் புறப்பட்டு சென்றிருக்கிறார். அவர் என்ன விதமான முடிவை மேற்கொள்வதற்காக டெல்லி சென்று இருக்கிறார், இது எத்தகைய அரசியல் விமர்சனங்களை, அதுவும், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும்போது ஏற்படுத்தும் என்பதெல்லாம் அடுத்தடுத்து பல கேள்விக்கான விஷயங்கள்.

You might also like