புது எண்ணங்கள் உருவாக வழிகாட்டும் நூல்!

நூல் அறிமுகம்:

சிறுகதைக்குள் இருக்கும் கலைத் திறனும் கற்பனையும் வரம்பு மீறாத உணர்வுகளும் வாசகருக்குப் புதிதான எண்ண ஓட்டங்களைத் திறந்துவிட வேண்டும்.

அதைத்தான் ‘கல்லறையை உள்ளிருந்து திறக்க முடியாது’ என்கிற தொகுப்பு வழியாக மால்கம் செய்திருக்கிறார்.

இந்தத் தொகுப்பில் மொத்தம் எட்டுச் சிறுகதைகள்.

முற்போக்கிலும் சரி, புனைவிலும் சரி, எதிலும் சமரசம் ஆகாமல் படைப்புகள் முன்னிறுத்தப்பட்டுள்ளன.

எளிமையான நடையில் சுவாரசியமான களங்களில் புதுமையான கண்ணோட்டங்களில் வெளிவந்திருக்கிறது இந்தத் தொகுப்பு.

நன்றி: ஆனந்த விகடன்

*****

நூல்: கல்லறையை உள்ளிருந்து திறக்க முடியாது
ஆசிரியர்: மால்கம்
பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.100/-
நூலைப் பெற: 9092787854

You might also like