லேப்டாப்பில் சார்ஜ்; இப்படியும் நடக்கிறது!

நாமக்கல் மாவட்டம் கீழ்வேளூரைச் சேர்ந்தவர் சரனிதா (32). இவர் கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார்.

எம்.டி. முடித்த மருத்துவர் சரனிதா, ஒரு மாத பயிற்சிக்காக சென்னை வந்துள்ளார். அயனாவரத்தில் தங்கி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்தார். இவரது கணவர் உதயகுமார் கோயம்புத்தூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 5 வயதில் குழந்தை உள்ளது.

இந்நிலையில் சரனிதாவை நேற்று (27.05.2024) காலை அவரது கணவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் நீண்டநேரமாக அவர் போனை எடுக்கவில்லை.

இதையடுத்து சரனிதாவின் கணவர், அவர் தங்கியிருந்த விடுதி நிர்வாகத்துக்கு போன் செய்து அவரது அறைக்குச் சென்று பார்க்குமாறு தெரிவித்துள்ளார்.

அப்போது விடுதி நிர்வாகத்தினர் அங்கு சென்று பார்த்தபோது, மருத்துவர் சரனிதா, லேப்டாப்புக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி, இறந்து கிடந்தது தெரியவந்தது.

சார்ஜ் ஒயரை கையில் பிடித்தவாறே அவர் இறந்து கிடந்தது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like