உழைப்பவர்களை உயர்த்தும் ஏணி!

சர்வதேசப் பயிற்சியாளர் தன்னம்பிக்கை பேச்சாளார், மருத்துவர் அருளானந்து அவர்கள் மிகச் சாதாரணமாக வாழ்க்கையைத் தொடங்கி இன்று தொழிலதிபராக உயர்ந்துள்ளது மட்டுமல்ல, பலரை கோடீஸ்வரர்களாகவும் உருமாற்றம் செய்துள்ளார்.

ஆயிரக்கணக்கானவர்களை வாழ வைக்கும் ஆலமரமாகவும் உயர்ந்துள்ளார்.

மனிதவளப் பயிற்சியாளர் உதயசான்றோன் வெற்றியைப் பற்றிப் பேசுபவர்கள், அவர்களும் வெற்றியாளர்களாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து.

இந்த நூலின் ஆசிரியர் வெற்றியாளர் மட்டுமல்ல; பல வெற்றியாளர்களை உருவாக்கும் மாபெரும் வெற்றியாளர். திரு. கலியமூர்த்தி பாலமுருகன் ஐ.எஃப்.எஸ் அவர்களின் “அனுபவயியல், உளவியல், அறிவியல்” என்ற மூன்று இயல்களையும் உள்ளடக்கியிருக்கிறது.

அதுமட்டுமல்ல; மாணவர்கள், ஆசிரியர்கள், தொழில் துறையாளர்கள், பெண்கள், இல்லத்தரசிகள், உழைப்பாளிகள் என அனைவருக்கும் பயன்படுகிற உள்ளடக்கங்களைத் தாங்கியிருப்பதாலும் இந்நூல் தனித்துவம் மிக்கதாகிறது.

நூல்: நம்பிக்கை மேல் நம்பிக்கை
ஆசிரியர்: டாக்டர் தே.அருளானந்து
பதிப்பகம்: எழில் பதிப்பகம்
பக்கங்கள்: 136
விலை: ரூ.120/-

You might also like