இளையராஜாவுக்கு நான் உதவினேனா?

வாசிப்பின் ருசி:

வாசகர் கேள்வி: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நீங்கள் தான் ஆரம்பத்தில் உதவி செய்தீர்கள் என்று அவரே ஒரு பேட்டியின் போது சொன்னாரே. உண்மை தானா?

ஜெயகாந்தன் பதில்: நான் அவ்விதம் எல்லாம் யாருக்கும் எந்த உதவியும் செய்ததில்லை. நான் செய்யும் உதவி என்னை நாடி வருவோர்க்கு நம்பிக்கை தருவது தான்.

இளையராஜா சகோதரர்கள் எனக்குத் தெரிந்தவர்கள். அவர்கள் சினிமா சான்ஸூக்காக சென்னை வந்தபோது “உங்களை நம்பி வந்திருக்கிறோம்” என்றனர்.

“என்னை நம்புவதை விட, உங்களையே நம்பி முயற்சி செய்யுங்கள்” என்று சொல்லி அனுப்பியது ஒரு உதவியாகி விடுமா?”

  • ஜெயகாந்தன் ஆசிரியராக இருந்து நடத்திய ‘கல்பனா’ பத்திரிகையில் வெளிவந்த கேள்வி-பதில் பகுதியில் இருந்து…
You might also like