கிராமத்துப் பின்னணியில் உருவாகும் காமெடி படம்!

நடிகர்கள் சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்க, கிராமத்துப் பின்னணியில் வித்தியாசமான புதிய காமெடி திரைப்படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாகத் துவங்கியுள்ளது.

கடந்த வாரம் பூஜை நடைபெற்ற நிலையில், காரைக்குடியில் படப்பிடிப்பு கோலாகலமாக துவங்கியது.

முன்னதாக பிஆர் டாக்கிஸ் கார்பரேஷன்ஸ் தயாரிப்பில், நடிகர் சுரேஷ் ரவி நடித்த “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் விமர்சக ரீதியாக தரமான திரைப்படம் என்ற பாராட்டையும் பெற்றது.

தற்போது இதே தயாரிப்பு நிறுவனமும் நடிகர் சுரேஷ் ரவியும் இணையும் இரண்டாவது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடதக்கது.

இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் தற்போதைக்கு Production No. 2 என்று அழைக்கப்படுகிறது.

இன்றைய நகர வாழ்க்கை, கிராமத்து வாழ்வியல் இரண்டையும் படம்பிடித்து காட்டும் வகையில், சுரேஷ் ரவி, யோகிபாபு இருவரும் இணைந்து நடிக்க, கிராமத்து பின்னணியில் கலக்கலான காமெடி டிராமாவாக படம் உருவாகவுள்ளது.

இயக்குநர் K பாலையா எழுதி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கியுள்ள நிலையில், தொடர்ந்து தேனி, கொடைக்கானல் மதுரை, சென்னை பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

படத்தில் சுரேஷ் ரவி, யோகிபாபு முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தீபா பாலு பிரிஜிடா சாகா, தேஜா வெங்கடேஷ் ஆகியோருடன் கருணாகரன், வேல ராமமூர்த்தி, ஆதித்யா, கதி,ர் அப்பு குட்டி, ஆதிரா, ஞானசம்பந்தம் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

You might also like