தங்கை மகனின் நடிப்பைப் பாராட்டிய உதயா!

தலைப்புக்கேற்றாற்போல் வண்ணமயமான இளமை ததும்பும் திரைப்படமான ‘ரங்கோலி’ திரைக்கு வந்துள்ளது.

என்னுடைய தங்கையின் மகன் ஹமரேஷ் இதில் நாயகனாக நடித்துள்ளார் என்பது எங்களது குடும்பத்திற்கு பெருமை அளிக்கும் விஷயமாகும் என்று வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் நடிகர் உதயா.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தெய்வத் திருமகள்’ மற்றும் ‘மாநகரம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் தனது சிறு வயதில் நடித்த ஹமரேஷ் இன்று வளர்ந்து நாயகனாக நம்முன் நிற்கிறார். அவர் திரை உலகில் மிகப்பெரிய வெற்றி பெறவேண்டும் என்று ஒரு நடிகனாகவும் தாய் மாமனாகவும் நான் வாழ்த்துகிறேன்.

நமது பள்ளிப்பருவத்தை நினைவுப்படுத்தும் விதமாக உணர்வுபூர்வமான வகையில் ‘ரங்கோலி’ உருவாகியுள்ளது.

அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இப்படத்தை இயக்குநர் வாலி மோகன் தாஸ் உருவாக்கியுள்ளார்.

இயக்குநர் வசந்த் அவர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ள வாலி மோகன்தாஸ் தனது முத்திரையை இப்படத்தில் பதித்துள்ளார்.

படத்தைப் பார்த்த திரையுலகப் பிரபலங்கள், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் தங்களது பாராட்டுகளைத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

மக்கள் அனைவரும் இப்படத்தை திரையரங்குகளில் சென்று கண்டு, ரசித்து, வாழ்த்த வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நல்ல திரைப்படங்களை மக்கள் என்றுமே கொண்டாடி இருக்கிறார்கள். அந்த வரிசையில் ‘ரங்கோலி’ அமையும் என்பது எனது நம்பிக்கை” என்று வாழ்த்தியுள்ளார்.

You might also like