கொய்யாவின் பயன்களும் பயன்பாடுகளும்!

பொதுவாக பழங்கள் என்றாலே உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது. அவற்றில் மிக முக்கியமானது சூப்பர் ப்ரூட் என அழைக்கப்படும் கொய்யாப் பழமும் ஒன்று. ஏனென்றால் கொய்யாவில் அவ்வளவு ஆற்றல் உள்ளது.

கொய்யாப் பழத்தில் வைட்டமின், மினரல்ஸ் அதிகமாக உள்ளது. கொழுப்பும், கலோரியும் குறைவாக உள்ளது. அதனால்தான் கொய்யா “சூப்பர் ப்ரூட்” என்று அழைக்கப்படுகிறது

உலகம் முழுவதும் 150 கொய்யா வகைகள் உள்ளன. தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடியில் கொய்யாவின் விளைச்சல் அதிகமாகக் காணப்படுகிறது.

இன்னும் சொல்லப்போனால் ஆரஞ்சுப் பழத்தை விட 4 மடங்கு வைட்டமின் சி ஒரு கொய்யாப் பழத்தில் உள்ளது.

அன்னாசிப் பழத்தை விட 4 மடங்கு புரோட்டின், 5 மடங்கு பைபரும் ஒரே ஒரு கொய்யாவில் உள்ளது.

2 மடங்கு லைகோபின் தக்காளியை விட இதில் அதிகம்.

லைகோபின் என்றால் இது ஆன்டி ஆக்சிடென்டாக செயல்பட்டு நம் உடலில் உள்ள பாதிப்படைந்த செல்களை குணப்படுத்துகிறது. இப்போது கொய்யாவின் நன்மைகள் பற்றி விரிவாக பார்ப்போம்.

கொய்யாவின் நன்மைகள் :
• நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் – நம் உடலில் உள்ள பாக் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் சக்தி கொய்யாவில் உள்ளது.

• வைட்டமின் ஏ, சி, கரோட்டின், ஆன்டி ஆக்சிடென்ட் அதிகமாக உள்ளதால் உடல் தசை சுருக்கங்களை உடனடியாக சரிசெய்து முகம் சுருக்கங்களை பின்னோக்கி கொண்டு போகும்.

• தொடர்ந்து கொய்யாப் பழத்தை எடுத்துக் கொண்டால் புற்றுநோய் ஏற்படுத்தும் செல்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது. குறிப்பாக மார்பக புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது.

• நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த பழம் ஒரு வரப்பிசாதம் என்று சொல்லலாம். கொய்யாவிற்கு சர்க்கரையை உயர்த்துகின்ற தன்மையெல்லாம் இல்லை. அதனால் தான் இப்பழம் ஒரு பொக்கிஷமாகப் பார்க்கப்படுகிறது.

• சோடியம், பொட்டாசியம் நிறைந்துள்ளதால் உயர் இரத்த அழுத்தத்தை தடுத்து கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பைத் தந்து இதயத்தை பாதுகாப்பாக வைக்கிறது.

• கர்ப்ப காலத்தில் ஏற்படும் வைட்டமின் குறைகளை தீர்க்கிறது. வைட்டமின் பி அதிகமாக உள்ளதால் குழந்தைகளின் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

• கண் பார்வைக்கு மிகவும் நல்ல பழம். வைட்டமின் ஏ அதிகமாக உள்ளதால் கண் பொறையையும் தடுக்கும்.

• மன அழுத்தத்தை போக்குகிறது. மெக்னீசியம் நிறைந்துள்ளதால் கடினமாக உழைப்பவர்கள் ஒரு கொய்யா பழம் சாப்பிட்டால் உடம்பு, தசைகளெல்லாம் சுறுசுறுப்பாக இயங்கும்.

• வைட்டமின் பி3, பி6 நிறைந்துள்ளதால் மூளையின் இரத்த ஒட்டத்தை மேம்படுத்தி நினைவாற்றலைத் தூண்டுகிறது. குழந்தைகளின் நியாபக சக்தி பெரிதும் துணைப் புரிகிறது.

• உடல் எடையை குறைக்கவும், கூட்டவும் உதவி புரிகிறது. வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் சளி மற்றும் இருமலை போக்கும்.

• வைட்டமின் ஏ, சி, கரோட்டின், ஆன்டி ஆக்சிடென்ட் அதிகமாக உள்ளதால் உடல் தசை சுருக்கங்களை உடனடியாக சரிசெய்து முகம் சுருக்கங்களை பின்னோக்கி கொண்டு போகும்.

வயதான தோற்றத்தை இது தள்ளிப்போட்டு இளமையை கட்டிப் போடுகிறது.

• நல்ல நிறத்தை தரும். வைட்டமின் கே நிறைந்துள்ளதால் முக அழகைக் கொடுக்கும்.

• செம்பு அதிகமாக உள்ளதால் தைராய்டு சம அளவில் கட்டுப்படுத்தும்.

• இரத்த அழுத்தத்தை குறைக்கும். நார்சத்து உள்ளதால் கொழுப்பை சேரவிடாமல் கட்டுப்படுத்தும்.

செய்யக்கூடாதவை ;
இரவில் சாப்பிடக்கூடாது. கொய்யாப் பழம் சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடிக்க கூடாது.

கொய்யா இலையின் மருத்துவப் பயன்கள் ;

கொய்யாப் பழத்தை விட கொய்யா மரத்தில் அதிக சத்துக்கள் உள்ளன. கொய்யா மரத்தின் இலையில் ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு அவ்வளவு சத்துக்கள் உள்ளன.  கொய்யா மரத்தின் இலையிலுள்ள மருத்துவ குணங்களைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

• பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஏற்படும் முடி கொட்டுதல் ஒரு பெரிய பிரச்சனையாகவே இருக்கிறது. அதற்கு ஒரு பெரிய தீர்வு கொய்யா இலையில் உள்ளது.

15 கொய்யா இலையை ஒரு மூன்று டம்ளர் தண்ணீரை ஊற்றி பாதியாகும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு தலை முடியை முன்பக்கமாக படும்படி போட்டுக்கொண்டு கொய்யா இலையை கொதிக்க வைத்து நீரை முடிவில் நன்கு தடவி மசாஜ் செய்து 30 நிமிடம் காய வைத்து விட்டு ஷாம்பு இல்லாமல் சாதாரண நீரில் அலச வேண்டும்.

இப்படியே தொடர்ந்து வாரம் இரண்டு முறை செய்தால் முடி கொட்டுவது நாளாக நாளாக குறையும்.

• முகப்பொலிவு – மூன்று கொய்யா இலையை தயிருடன் சேர்த்து அரைத்து முகத்தில் பேக் மாதிரி இரண்டு நாளைக்கு ஒருமுறை போட்டால் ஒரு மாதத்தில் நீங்கள் மாற்றத்தை பார்க்கலாம்.

• வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனை தீர்க்கும் – வாய் துர்நாற்றம், சொத்தை பல், பல் வலி, ஈறுகளில் இரத்தம் கசிதல் போன்ற பிரச்சனைகளுக்கு கொழுந்து இலையை காலை பல் வளர்ப்பதற்கு முன் வாய் கொப்பளித்து விட்டு இலையை நன்றாக மென்று சாறு வரும்பொழுது வாய் கொப்பளித்தால் பல் மற்றும் வாய் பிரச்சனைகளைத் தீர்க்கும் தன்மையுண்டு.

• வயிற்றுப் புண் – வயிற்றுப் புண் குணமாக கொய்யா இலையில் டீ குடிக்க புண் குணமாகும்.

ஆறு கொழுந்து இலையை இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து, இரண்டு டம்ளர் ஒரு டம்ளராக மாறும் வரை கொதிக்க வைத்து தேவைக்கேற்ப தேன் சேர்த்து டீயை காலையில் வெறும் வயிற்றில் அருந்தினால் வயிற்றுப் புண், உணவுக் குழாயில் உள்ள புண் அனைத்தும் குணமாகும்.

கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் டீயை அருந்தினால் மாற்றம் தரும். சர்க்கரை நோயுள்ளவர்கள் தினமும் டீயை தேன் சேர்க்காமல் அருந்தினால் இன்சுலின் சரியான அளவில் சுரக்க உதவி புரியும்.

– வைஷ்ணவி பாலு

You might also like