ஜெயிலர் படத்தின் கதையை வெளியிட்ட படக்குழு!

சிலை கடத்தலை மையமாகக் கொண்டு ‘ஜெயிலர்’ கதையை நெல்சன் உருவாக்கியிருக்கிறாராம்.

சிலை கடத்தலில் சம்பந்தப்பட்ட முக்கியப் புள்ளியான வில்லன் (ஜாக்கி ஷெராப்) ரஜினி ஜெயிலராக இருக்கும் சிறையில் அடைக்கப்படுகிறார்.

அவரை மீட்க ஒரு கும்பல் களமிறங்குகிறது. ரஜினி அதை தடுக்கிறார்.

அதன்பின் என்ன நடக்கிறது என்ற ரீதியில் கதை நகர்கிறதாம்.

இதில் தமன்னாவுக்கு என்ன கேரக்டர் என்பது சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது.

இதற்கிடையே, சமீபத்தில் வெளியான ‘குக் கும்’ பாடலில் உள்ள, ‘இவன் பேர தூக்க நாலு பேரு.

பட்டத்த பறிக்க நூறு பேரு’ போன்ற வரிகள் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக் கொள்ளும் விஜயை சீண்டிப் பார்ப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.

You might also like