வைரமுத்து பிறந்தநாள்: ஆரூர் தமிழ்நாடனுக்கு விருது!

கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை வெற்றித் தமிழர் பேரவை ஆண்டுதோறும் கவிஞர்கள் திருநாளாகக் கொண்டாடி வருகிறது.

இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாள் ஜூலை 13 வியாழக்கிழமை காலை 9 மணிக்கு கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் உள்ள பொன்மணி மாளிகை திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது.

ஒன்றிய முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கம்பம் பெ.செல்வேந்திரன் இருவரும் வாழ்த்துரை வழங்கினார்கள்.

வெற்றித் தமிழர் பேரவை ஒவ்வோராண்டும் கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு கவிஞரைத் தேர்வு செய்து கவிஞர்கள் திருநாள் விருது வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு கவிஞர்கள் திருநாள் விருதை கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் பெற்றார்.

அவருக்குக் கவிஞர் வைரமுத்து விருது வழங்கினார். இந்த விருது ரூ.25,000 ரொக்கம், பாராட்டுப் பட்டயம் கொண்டதாகும்.

இதுவரை கவிஞர்கள் திருநாள் விருதினை சுரதா, சிற்பி பாலசுப்பிரமணியன், ஈரோடு தமிழன்பன், நா.காமராசன், வா.மு. சேதுராமன், கே.சி.எஸ். அருணாசலம்,

முகவை ராஜமாணிக்கம், முத்துலிங்கம், பூவை செங்குட்டுவன், காசி ஆனந்தன், இன்குலாப், இந்திரன், கல்யாண்ஜி, விக்கிரமாதித்யன், தமிழச்சி தங்கபாண்டியன், கலாப்ரியா, மனுஷ்ய புத்திரன், ஆண்டாள் பிரியதர்சினி, இளைய பாரதி, சல்மா, அ.வெண்ணிலா, இளம்பிறை, தாரா கணேசன், சக்தி ஜோதி உள்ளிட்ட பல கவிஞர்கள் பெற்றிருக்கிறார்கள்.

You might also like