30 நாட்களில் முடி வளர பச்சைப் பயிறு பேக்!

பொதுவாக பெண்களுக்கு தன்னை மேலும் அழகாக காட்டுவது அவர்களுடைய முடி என்று கூறலாம்.

அவற்றை சிறப்பாக வைத்துக்கொள்ள வேண்டிய ஒரே இடம் அழகு நிலையம் தான் என்று பலரும் நினைக்கின்றனர். அங்குச் சென்று பணம் செலவழித்து அழகை மெருகேற்றி வருகின்றனர்.

ஆனால் சிலர் இயற்கை வழிகளிலும், வீட்டிலுள்ள பொருட்கள் வைத்து செலவில்லாமல் தீர்வு காண விரும்புபவர்களுக்காக பச்சைப் பயிறு.

பச்சை பயிறு உடலுக்கு தேவையான சத்துக்களை தருவதுடன், முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. 30 நாட்களில் முடி வளர பச்சைப் பயிறு பேக்.

தேவையான பொருள்கள் :
பச்சை பயிறு – 1 கப்
முட்டை – 2
தயிர் – 3 தேக்கரண்டி

ஸ்டெப் 1 :
ஒரு கப் பச்சை பயிறை முந்தைய நாள் இரவு ஈரப்பதமான துணியால் காற்று போகாதவாறு கட்டிவிட வேண்டும். அடுத்த நாள் காலை பச்சை பயிறு முளைத்து (முளைக்கட்டிய பயிர்) ஆக மாறியிருக்கும்.

ஸ்டெப் 2 :
முளைக் கட்டிய பயிறையும், தயிரும் கலந்து பேஸ்ட் போல அரைத்துக் கொள்ள வேண்டும். தயிர் முடியை பொடுகு இல்லாமலும், பளபளப்பாகவும், மினுமினுப்பாகவும் மாற்றும் தன்மைக் கொண்டது.

ஸ்டெப் 3 :
அரைத்து வைத்த பச்சை பயிறு பேஸ்ட்டை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளவும். பிறகு பேஸ்ட்டில் 2 முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் எடுத்துக்கொள்ளவும். பிறகு பேஸ்ட்டை நன்கு கலந்துக் கொள்ளவும். இப்போது பச்சை பயிறு பேக் தயார்.

பேக்கை பயன்படுத்தும் முறை : குளிப்பதற்கு முன் தலையில் கொஞ்சமாக எண்ணெயை வைத்து உங்களுடைய உச்சந்தலையில் இருந்து அனைத்து முடியில் முழுவதுமாக படரும் படியாக தேய்த்துக் கொண்டு 20 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்தால் 30 நாட்களில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

– வைஷ்ணவி

You might also like