மணிப்பூர் வன்முறை: பிரதமருக்குக் கடிதம் எழுதிய பாஜகவினர்!

மணிப்பூரில் நீடித்து வரும் வன்முறைக்குப் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பலர் பலியாகி இருக்கிறார்கள். பொதுச்சொத்துகள் ஏராளமாகச் சேதம் அடைந்திருக்கின்றன.

பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டிருந்தாலும், அதையும் மீறிக் கலவரச்சூழல் நீடித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மணிப்பூர் அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக மணிப்பூரில் உள்ள பா.ஜ.க. எம்.பி.க்கள் எட்டு பேர் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

எம்.பிக்களே இப்படியொரு கடிதம் எழுதும் அளவுக்கு முற்றியிருக்கிறது மணிப்பூர் நிலைமை.

You might also like