கலைக் கல்லூரிகளில் குவியும் மாணவர்கள்!

தமிழகத்தில் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த 8-ம் தேதி தொடங்கியது.

விண்ணப்பதாரர்கள் www.tngasa.in என்ற இணையதளங்களில் சென்று  விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரை 1,96,226 பேர் விண்ணப்ப பதிவு செய்துள்ளனர்.

அவர்களில் 1,44,240 பேர் விண்ணப்பக்கட்டணம் செலுத்தியுள்ளதாகவும், 19,624 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 19-ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், இன்ஜினியரிங் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த 5-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 1,29,192 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களில் 79,890 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியிருப்பதாகவும், 41,552 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் புள்ளி விவரங்களின் அடிப்படையில், இன்ஜினியரிங் விண்ணப்பப் பதிவை விட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் விண்ணப்பப் பதிவு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி:  தினகரன்

You might also like