உதயநிதியோடு ஐபிஎல்லை ரசித்த சிறுவர்கள்!

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் கிரிக்கெட் விளையாட்டின் மீது தீராத ஆர்வமும், திறமையும் கொண்ட பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மறக்கமுடியாத வாய்ப்பை வழங்கியிருக்கிறார் அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை காண வசதியாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வட்டம் வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுவர், சிறுமியருக்கு ஐபிஎல் டிக்கெட்டுகளை வாங்கித் தந்து போட்டிகளைக் காண உதவி வருகிறார்கள்.

அந்த வகையில், 119 வட்டத்தைச் சேர்ந்த 150 சிறுவர், சிறுமியர்கள் உதயநிதியுடன் சேர்ந்து சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் Vs டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையேயான ஐபிஎல் போட்டியை கண்டு மகிழ்ந்தனர்.

You might also like