ஐ.பி.எல்.லில் ராஜஸ்தானை வீழ்த்திய ஐதராபாத் அணி!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய 2வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்கார ஜெய்ஸ்வால் 18 பந்தில் 2 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் ஜோஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடியது. இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 138 ரன்களை சேர்த்தது.

இறுதியில், ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை குவித்தது. சஞ்சு சாம்சன் 66 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. இதில், அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 29 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து, ராகுல் திரிபாதி 47 ரன்களும், அன்மோல்ப்ரீத் சிங் 33 ரன்களும் எடுத்தனர். அப்துல் சமான் மற்றும் மார்கோ ஜான்சன் ஆகியோர் ஆட்டமிழக்காமல் விளையாடினர்.

ஆட்டத்தின் முடிவில் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்து ஐதராபாத் அணி அபாரமாக வெற்றிப்பெற்றது.

You might also like