அமைதியைக் குலைப்பதா ஆளுநர் வேலை?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சென்னை பல்லாவரத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், 6-வது முறையாய் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள திமுக அரசு, ஈராண்டை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்றும் 10 ஆண்டு காலம் பாழ்பட்டு கிடந்த தமிழ்நாட்டை மீட்டது உதயசூரியன் ஆட்சி என்றும் கூறினார்.

திராவிடம் என்பது காலாவதியான கொள்கை அல்ல, சனாதனத்தை காலாவதியாக்கியது திராவிடம் என்றும் கூறிய முதலமைச்சர், வர்ணாசிரமத்தை காலாவதியாக்கியது திராவிடம் என்றும் ஆரிய படையெடுப்புகளை வீழ்த்தும் ஆயுதம்தான் திராவிடம் என்றும் பேசினார்.

தமிழ்நாட்டில் நிலவும் அமைதியை குலைக்க ஆளுநர் வந்துள்ளாரா என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது எனக் கூறிய முதலமைச்சர், ஆளுநரும் எதிர்க்கட்சித் தலைவராக மாறிவிட்டார் எனக் கூறினார்.

You might also like