குஜராத்தில் 41 ஆயிரம் மேற்பட்ட பெண்கள் மாயம்!

ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஏற்படுத்திய சர்ச்சை இன்று வரை குறையாமல் தொடர்கிறது. 32,000 பெண்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறி ஐஎஸ் அமைப்பில் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது.

இது தொடர்பாக வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படாத நிலையில் ஆதாரமற்ற தகவல்களை வைத்து இயக்குநர் படத்தை இயக்கியுள்ளதாக ஊடகங்கள் விமர்சித்துள்ளன.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 2016 முதல் 2020 வரை 5 ஆண்டுகளில் 41,621 பெண்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்சிஆர்பி) தரவுகளின்படி, 2016 ஆல் 7,105 பெண்களும், 2017 இல் 7,712 பெண்களும், 2018 இல் 9,246 பெண்களும், 2019 இல் 9,268 பெண்களும். 2020 இல் 8,290 பெண்கள் என மொத்தம் 41,621 பெண்கள் காணாமல் போயுள்ளனர்.

இதில், குறிப்பாக குஜராத் மாநிலத்தின் முக்கிய நகரங்களான அகமதாபாத் மற்றும் வதோதராவில் 2021 இல் 4,722 பெண்கள் காணாமல் போயுள்ளனர். இந்த தகவல் குஜராத் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like