பொன்வண்ணனை எனக்குப் பிடிக்கக் காரணம் இது தான்!

நடிகை சரண்யா பொன்வண்ணன் நெகிழ்ச்சி

தனது கணவர் பொண்வண்ணன் குறித்து பேசிய நடிகை சரண்யா, “கருத்தம்மா திரைப்படத்தில்தான் முதன்முறையாக என்னை சந்தித்தார் என் கணவர் பொண்வண்ணன்.

அந்தப் படத்திலும் கணவன் மனைவியாகத்தான் நடித்திருப்போம். ஆனால் படத்தின் அசோசியேட்டாக இருந்ததால் ஷூட்டிங்கில் எப்பவுமே அவர் பிஸியாக இருப்பார், தன்னிடம் பேசியது கூட இல்லை.

அப்படி இருந்தவர் திடீரென்று ஒரு நாள் எனக்கு கால் செய்து, நான் இயக்குனராகப் போகிறேன். உங்களது கால்ஷீட் வேண்டும் என்று கேட்டார். எத்தனை நாட்கள் கால்ஷீட் வேண்டும் என்று நான் கேட்க, 70 ஆண்டுகள் வேண்டும் என்று பதில் சொன்னார்.

எதற்காக கால் செய்தார் என்று உடனே எனக்கு புரிந்து விட்டது.

ஏதோ விளையாட்டாக திருமணம் செய்து கொள்ளலாம் என கேட்கிறேன் என்று நினைக்க வேண்டாம். நீங்கள் என் காதலை மறுத்து விட்டால் நான் ஒன்றும் செய்து கொள்ளப் போவதில்லை. அதனால் யோசித்து உங்களது முடிவை கூறுங்கள் என்று பொன்வண்ணன் கூறிவிட்டு கால் கட் பண்ணிவிட்டார்.

இப்படி தான் சரண்யாவிடம் பொண்வண்ணன் காதலை வெளிபடுத்தியிருக்கிறார்.

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா நடிகர் பொன்வண்ணன் ஒரு பேட்டியில் கூறியிருப்பார்.

அதில், ”நடிகர் பொன்வண்ணனிடம் நல்ல குணம் உள்ளது. நடிகரும் இயக்குநருமான பொன்வண்ணன் என்னுடைய நெருங்கிய நண்பர். தொடக்க காலங்களில் அன்னை வயல் என்ற படத்தை இயக்கினார்.

ஆனால், அந்தப் படம் பெரிய அளவில் ஓடவில்லை. பின்னர், தொலைக்காட்சி தொடர்கள் இயக்கம், தொடர்களில் நடிப்பது, சினிமாவில் நடிப்பது என அடுத்தடுத்த முயற்சிகள் செய்தார்.

பொன்வண்ணனின் உண்மையான பெயர் ஷண்முகம். சினிமாவில் அவர் நடிக்க ஆரம்பித்தபோது அவருக்கு தனிப்பட்ட பி.ஆர்.ஓ போல நான் செயல்பட்டேன். அவர் மிகச்சிறந்த ஓவியரும்கூட.

நிறைய அற்புதமான ஓவியங்கள் வரைந்துள்ளார். அவருடைய ஓவியங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகர். பொன்வண்ணனின் ஓவியத்திறமை குறித்து 99 சதவிகித மக்களுக்கு தெரியாது.

பொன்வண்ணனுக்கு பெரிய சம்பாத்தியம் எல்லாம் கிடையாது. அப்படியான சூழலில் சரண்யாவின் அப்பாவிடம் சென்று பொன்வண்ணன் பெண் கேட்டுள்ளார். மலையாளத்தில் பல வெற்றிப்படங்களை இயக்கிய ஏ.பி.ராஜின் மகள்தான் நடிகை சரண்யா.

அவரிடம் பெண் கேட்கையில், “சினிமாவில் நான் அசிஸ்டன்ட் டைரக்டரா ஒர்க் பண்ணிருக்கேன். டீவி சீரியல்களிலும் நடிச்சிருக்கேன்.

எதிர்காலத்தில் நிறைய படங்களிலும் நடிப்பேன். அதேபோல நிச்சயம் இயக்குநர் ஆவேன்.

இதெல்லாம் நடக்காமல் போனால்கூட என்னிடம் ஓவியம் வரையும் திறமை இருக்கிறது. அதை வைத்து சம்பாதித்து உங்கள் மகளை நல்லபடியாக பார்த்துக்கொள்வேன்.

எனவே உங்கள் பொண்ணை எனக்கு திருமணம் செய்துகொடுங்கள்” எனத் திறந்த மனதுடன் கேட்டுள்ளார்.

வெளிப்படையாக பேசிய பொன்வண்ணனின் இந்தப் பேச்சு சரண்யாவின் அப்பாவிற்கு மிகவும் பிடித்துவிட்டது. இரண்டு மூன்று நாட்களிலேயே அவர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார்” எனத் தெரிவித்தார்.

You might also like