கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 1-ல் பள்ளிகள் தொடக்கம்!

கோடைகால விடுமுறை முடிந்து வரும் 2023-2024 கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறக்கப்படும் தேதி மற்றும் பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார்.

அப்போது பேசிய அவர், ”கோடைகால விடுமுறை முடிந்து ஜூன் ஒன்றாம் தேதி 6-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும்.

1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5-ம் தேதி பள்ளிகள் தொடங்கும். 2024-ம் ஆண்டு மார்ச் 18-ல் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ஆரம்பமாகும்.

11-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 19-ம் தேதி தொடங்கும். 10ம் வகுப்பு பொதுத் தேர்வு 2024-ம் தேதி ஏப்ரல் 8-ம் தேதி தொடங்கும்” என்றுக் கூறினார். 

You might also like