தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா!

தமிழ்நாட்டில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், “தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் 4,573 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 401 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்மூலம் மொத்த பாதிப்பு 35,99,595 ஆக அதிகரித்துள்ளது என்றும் நேற்று ஒரு நாளில் 198 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.

வீட்டுத் தனிமையில் இருப்பவர்களையும் சேர்த்து 2301 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாகக் கூறியுள்ள சுகாதாரத்துறை,

அதிகபட்சமாக சென்னையில் 110 பேரும், செங்கல்பட்டில் 41 பேரும், சேலம் மாவட்டத்தில் 23 பேரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 22 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

You might also like