ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா உடனடியாக அமலுக்கு வரும்!

  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்ட மசோதாவிற்கு ஆளுநர்  ஒப்புதல் அளித்த நிலையில், சட்டப் பேரவையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “நாம் நிறைவேற்றி அனுப்பிய அரசினர் தனித் தீர்மானத்தில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் ஆளுநரின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையில் உள்ளதை சுட்டிக் காட்டியிருந்தோம்.

இதனால் தமிழ்நாட்டின் நிர்வாக நலனும், இளைஞர்களின் எதிர்காலமும் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை எடுத்துக் காட்டியிருந்தோம். அதன் விளைவாகவே தற்போது ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்” என்றுக் கூறினார்.

அதோடு பொதுவெளியில் ஆளுநர் தெரிவித்து வரும் சர்ச்சைக்குரிய கருத்துகள் குறித்து பேசிய முதலமைச்சர், “ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டமானது உடனே தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும்”  என்றுக் கூறினார். 

You might also like