39 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த முப்பெரும் கூட்டணி!

தங்கர்பச்சான் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில், கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய பாடல் பதிவானது.

அப்போது சித்ரா குறித்து பேசிய வைரமுத்து, “சித்ரா பாடிய முதல்பாட்டு 39 ஆண்டுகளுக்கு முன்  “பூஜைக்கேத்த பூவிது…” பாடலை பாடிய அதே பாடகி சித்ராவை நான் பாடல் பதிவில் சந்தித்தேன்.

அதே குரல்.. அதே கனிவு.. அதே பணிவு” என்று வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

இயக்குனர் தங்கர்பச்சான் பாடலைப் பற்றி குறிப்பிடும்போது..

“நான் ஒளிப்பதிவாளனாக அறிமுகமாகிய (மலைச்சாரல்-1990) திரைப்படத்தில் வைரமுத்து பாடல்களை எழுதினார்.

அந்தப்படத்தில் பாடகி சித்ராவும் பாடினார்.

எனது இயக்கத்தில் வளர்ந்து வரும் ‘கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படத்திலும் மூவருமே இணைந்து பணியாற்றுகின்றோம்!

தொடர்ந்து திரைக்கலையுலகில் மூவருமே பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம் என்பது மகிழ்ச்சியை அளிக்கின்றது” என்றார்.

’கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது.

You might also like