ஆணவக்கொலைகள் தடுக்க நடவடிக்கை!

– சட்டப்பேரவையில் முதலமைச்சர் உறுதி

கிருஷ்ணகிரி ஆணவக்கொலை சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார்.

எடப்பாடி பழனிசாமியின் கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

அப்போது பேசிய முதலமைச்சர், “கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் ஜெகனை பெண்ணின் தந்தை உட்பட 3 பேர் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இளைஞர் கொலையில் அதிமுக கிளைச்செயலாளர் சங்கர் உள்ளிட்ட 3 பேர் தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் ஆணவக்கொலை சம்பவங்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சமூக நீதி காக்கும் மண்ணாக தமிழகம் இருந்து வருகிறது.

அரசியலுக்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து சமூக நல்லிணக்கத்தை பேணிக்காக்க வேண்டும்” எனக் கூறினார்.  

You might also like