காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக வேட்டை!

பஞ்சாப் மாநிலத்தைப் பிரித்து காலிஸ்தான் என்ற தனி மாநிலத்தை உருவாக்குவதற்காகப் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ”வாரிஸ் பஞ்சாப் தே” இயக்கத் தலைவர் அம்ரித்பால் சிங் தலைமறைவாக உள்ளதாகவும், அவரைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருவதாகவும், விரைவில் அவர் கைது செய்யப்படுவார் எனவும் பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஷாகோட் காவல் நிலைய காவல்துறையினரால் அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டதாகவும், அம்ரித்பால் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், போலி என்கவுண்டரில் அவரை சுட்டுக் கொல்ல காவல்துறை திட்டமிட்டுள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் இமான் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

You might also like