அமெரிக்க ட்ரோன் மீது எரிபொருளை ஊற்றி தாக்கிய ரஷ்ய போர் விமானம்!

– கருங்கடலில் அதிகரிக்கும் பதற்றம்

ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் செயல்பட்டு வரும் நிலையில், கருங்கடல் பிராந்தியத்தில் பதட்டமான நிலை நீடித்து வருகிறது.

இந்நிலையில் கருங்கடலில் பறந்த அமெரிக்காவின் MQ-9 ஆளில்லா விமானத்தின் மீது ரஷ்யாவின் சுகோய்-27 போர் விமானம் எரிபொருளை ஊற்றி, அதன் மீது தாக்குதல் நடத்தியதில் ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானதாக அமெரிக்க ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.

MQ-9 ரீப்பர் கண்காணிப்பு ஆளில்லா விமானத்தை ரஷ்யா தாக்கியதன் காரணமாகவே அமெரிக்க ராணுவம் அதை கருங்கடலில் வீழ்த்தி சிதைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

You might also like