பாட்டாளிகளின் விடுதலைக்காக பாடுபட்ட மாமேதை!

இதோ இந்த மார்ச் 14-ம் தேதி மதியம் 3 மணிக்கு இவன் சிந்தனையில் மூழ்கிக் கொண்டு இருந்தான். அவனை நாங்கள் இரண்டு நிமிடங்கள் தனிமையில் விட்டுச் சென்றோம். திரும்பி வந்து பார்க்கையில் அவன் நாற்காலியில் உறங்கி போயிருந்தான் .இனி விழிப்பே இல்லாத தூக்கத்தில்…..

ஐரோப்போ மற்றும் அமெரிக்காவின் பாட்டாளி மக்கள் புரட்சி வரலாற்றில் இம் மனிதனின் சிறப்பு மதிப்பிட முடியாதது.

டார்வின் எவ்வாறு பரிணாம வளர்ச்சி விதியை கண்டடைந்ததைப்போல மார்க்சும் மனித வரலாற்றின் வளர்ச்சி விதியை கண்டடைந்தான்.

அரசியல், மதம், அறிவியல், கலை இவற்றை அடையும் முன் உண்ண உணவு, அருந்த நீர், இருக்க இடம், உடுத்த உடை ஆகியவற்றை மானுடம் பெற வேண்டும் என்று இவர் சொன்னது எளிய உண்மைதான்.

ஆனால் அதோடு முதலாளித்துவ அடிப்படையிலான உற்பத்தி முறையும் அது யாருக்கு பணிந்து செல்கிறது என்ற உண்மையையும் வெளிச்சம் போட்டு காட்டினான்.

தன்னை புரட்சிக்காரன் என்று அடையாளப்படுத்திக் கொள்வதில்தான் இவனுக்கு விருப்பம். முதலாளித்துவ சர்வாதிகாரத்தைத் தூக்கி எறிந்துவிட்டு பாட்டாளி வர்க்கத்தை அரியணையில் அமர வைக்க அரும்பாடுபட்டவன். போராட்டம் எனும் ஆயுதம் கொண்டு தன் இறுதி மூச்சு வரை உழைத்தவன்.

எத்தனை பேர் வேண்டுமானாலும் இவன் மீது குற்றம் சுமத்தலாம், பழிபோடலாம். ஆனால் அவன் பாட்டாளிகளை நேசித்தான். உழைக்கும் மக்களுக்காக உயிர் கொடுத்தான். மார்க்ஸ் பிறக்கும் போது யூதனாகப் பிறந்தான். புரட்சிகாரனாக வளர்ந்தான். போராளியாக இவன் பெயர் நிலைத்திருக்கும் அவன் எழுத்துக்களும்.

மாமேதை மார்க்ஸ் இறந்த போது அவரின் நண்பர் ஃபிடரிக் ஏங்கல்ஸ் ஆற்றிய உரை.

பாட்டாளிகளை நேசித்த அந்த பாட்டாளிகளின் விடுதலைக்காக தனது இறுதி மூச்சு வரை சிந்தித்த மாமேதையின் நினைவு நாள் இன்று.

You might also like