நாகையில் கரை ஒதுங்கிய சீன சிலிண்டரால் பரபரப்பு!

நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார்நகர் கிராம மீனவர்கள் கரை ஒதுங்கிய சிலிண்டர் ஒன்றை கைப்பற்றினர். இந்த சிலிண்டரில் சீன எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் க்யூ பிரிவு மற்றும் இந்திய கடலோர காவல்படையினர் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

3 அடி உயரமும், 30 கிலோ எடையும் கொண்ட இந்தச் சிலிண்டர் கப்பலில் இருந்து தவறி விழுந்ததா? அல்லது கடலில் வீசப்பட்டதா என்பன போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

அமெரிக்கா போன்ற நாடுகளை சீன உளவு பார்ப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் சீன எழுத்துப் பொறிக்கப்பட்ட சிலிண்டர் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like