உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலுவை வழக்குகள்!

உச்சநீதிமன்றத்தில் 69,000-க்கும் மேற்பட்ட வழக்குகளும், உயா்நீதிமன்றங்களில் 59 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக மாநிலங்களவையில் ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பான கேள்விக்கு ஒன்றிய சட்டத்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு எழுத்து மூலம் அளித்த பதிலில், உச்சநீதிமன்ற இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி பிப்ரவரி 1-ம் தேதி நிலவரப்படி 69,511 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும்,

பிப்ரவரி 1-ம் தேதி நிலவரப்படி நாட்டில் உள்ள 25 உயா்நீதிமன்றங்களில் 59 லட்சத்து 87 ஆயிரத்து 477 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும் இந்தத் தகவல்கள் தேசிய நீதித்துறை தகவல் மையத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மிக அதிகபட்சமாக அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் 10.30 லட்சம் வழக்குகளும் குறைந்தபட்சமாக சிக்கிம் உயா்நீதிமன்றத்தில் 171 வழக்குகளும் நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள கிரண் ரிஜிஜூ,

தேசிய அளவில் அனைத்து நீதிமன்றங்களிலும் சோ்த்து 4.32 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும், நிலுவை வழக்குகளை விரைந்து விசாரித்து தீா்வு காண்பதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்க ஒன்றிய அரசு அனைத்து வகையிலும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

You might also like