காவிரியில் தண்ணீர் எடுக்க கர்நாடகாவை அனுமதிக்கக் கூடாது!

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு

கர்நாடகம் – தமிழ்நாடு இடையே மேகதாது அணை விவகாரத்தில் பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு மாநகர குடிநீர் திட்டத்திற்கு காவிரி நதியிலிருந்து நீரை எடுக்க கூடாது என கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு மனுவில் கூறியுள்ளது.

காவிரி நதியிலிருந்து எடுக்கப்படும் நீரை கண்காணிக்க காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மேகதாது அணை பாதுகாப்பு விவசாயிகள்  டெல்லியில் பேராராட்டம் நடத்த உள்ள நிலையில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள கூடுதல் மனு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

You might also like