எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள ‘பாயும் ஒளி நீ எனக்கு’!

விக்ரம் பிரபு-டாலி தனஞ்சயா-வாணி போஜன் நடித்த ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் முழு திரையரங்கு மற்றும் திரையரங்கு அல்லாத உரிமைகளையும் எஸ்பி சினிமாஸ் பெற்றுள்ளது.

நல்ல தரமான திரைப்படங்களைத் தயாரித்து வெளியிடுவதில் முழு ஈடுபாட்டுடன் இருக்கும் தயாரிப்பு நிறுவனம் எஸ்பி சினிமாஸ்.

அந்த வகையில்தான் விக்ரம் பிரபுவின் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் திரைப்படமான ‘பாயும் ஒளி நீ எனக்கு’ திரைப்படத்தை எஸ்பி சினிமாஸ் தேர்ந்தெடுத்துள்ளது.

அதை உலகம் முழுவதும் வெளியிடவுள்ளது. இப்படம் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது.

கார்த்திக் அத்வைத் இந்த படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார். அதோடு, தனது தயாரிப்பு நிறுவனமான கார்த்திக் மூவி ஹவுஸுக்காக இந்தப் படத்தை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார்.

கார்த்திக் அத்வைத் நியூயார்க் ஃபிலிம் அகாடமியின் முன்னாள் மாணவர்.

தனது பட்டப்படிப்பிற்குப் பிறகு, இயக்குனர் ராஜமௌலி அவர்களுடன் தொடர்ந்து பயணித்த புகழ்பெற்ற மூத்த எடிட்டரான கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் அவர்களின் கீழ் கார்த்திக் பணியாற்றினார். 

பிரமாதமாக வழங்கப்பட்ட இந்த படத்தின் ஆக்‌ஷன் டீஸர், அதன் நேர்த்தியான காட்சிகள் மற்றும் படத்தொகுப்புகள், அட்டகாசமான இசை மற்றும் விக்ரம் பிரபுவின் சிறந்த திரை ஈர்ப்பு ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்கனவே உயர்த்தியுள்ளது.

You might also like