எனக்கு முழு சுதந்திரம் இருந்தது!

– நடிகர் விஜய் சேதுபதி

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகர் ஷாஹித் கபூர் இணைந்து நடித்துள்ள அமேசான் ஒரிஜினல் தொடரான ‘ஃபார்ஸி’ எனும் வலைதளத் தொடரின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.

இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே உருவாக்கிய இந்த, க்ரைம் த்ரில்லர் தொடரில் ஷாஹித் கபூர் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் டிஜிட்டல் அறிமுகமாக அமைந்துள்ளது.

அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தொடரான ‘ஃபார்ஸி’, பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் இந்தியாவிலும், 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் முழுவதும் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.

ஒரு கச்சிதமான மோசடியை செயல்படுத்தி அதில் பயணிக்கும் சன்னி, திடீரென தான் ஒரு இருண்ட பகுதிக்குள் நுழைகிறோம் என்பதை உணர்கிறான்.

அதிகம் அறியப்படாத ஒரு ‘காமன் மேன்’ உடைய வாழ்க்கையின் ஒரு கண்ணோட்டத்தை இதன் முன்னோட்டம் காட்சிப்படுத்துகிறது .

இயக்குநர் ராஜ் பேசும்போது, “இந்த தொடர் எங்களுக்கு கடினமான ஒன்றாக இருந்தது. கோவிட் காலத்தில் இதை நாங்கள் படமாக்கினோம். அதில் சில சிக்கல்கள் இருந்தது, அதை தாண்டி இதை நாங்கள் உருவாக்கினோம்.

நமக்குள் இருக்கும் உண்மையை அடிப்படையாக வைத்துதான் இந்த தொடர் உருவாக்கப்பட்டது” என்றார்.

நடிகர் ஷாஹித் கபூர், “இந்த ஆண்டை ‘ஃபார்ஸி’ எனும் வலைதளத் தொடர் மூலம் துவங்குவது மகிழ்ச்சி. எந்த தயக்கமும் இல்லாமல், ஓடிடியில் இணைய நானும் தயாராகிவிட்டேன்.

அவர்கள் இந்த கதையை ஒரு கூட்டணியாக இணைந்து அதிக கவனத்துடன் உருவாக்கி உள்ளனர். கதாபாத்திர வடிவமைப்பு ஒவ்வொன்றும் சிறப்பான வடிவில் வந்துள்ளது.

‘மக்கள் செல்வன்’ என்ற பெயருக்கு பொருத்தமானவர்தான் விஜய் சேதுபதி. அவர் இதயபூர்வமான நடிகர், அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள விருப்பப்படுகிறேன்” என்றார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, “குறும்படமோ, தொடரோ அனைத்துமே காட்சிகளுக்கு உயிர் கொடுப்பதுதான். ராஜ் மற்றும் டிகே என் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தனர்.

ஒரு நடிகராக எனக்கு முழு சுதந்திரமும் இந்த தொடரில் இருந்தது. ஷாஹித் கபூருடன் நடித்தது, சிறந்த அனுபவமாக இருந்தது.

ராஷி கண்ணாவுடன் நடிக்கும் போது அந்த காட்சியே ஒரு தனித்துவமான ரிதமில் இருக்கும். அவருடன் திரையை பகிர்வது எப்பொழுதும் மகிழ்ச்சிதான்” என்று நெகிழ்வுடன் பேசினார்.

You might also like