போதைப் பொருள் கடத்தல்கார்களுக்கு எச்சரிக்கை!

டிஜிபி சைலேந்திரபாபு!

சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் இயங்கி வரும் காவலர் பல்பொருள் அங்காடியில், காவலர்கள் மற்றும் காவலர்கள் குடும்பத்தினர் பயன்பாட்டிற்கு புதிதாக அமைக்கப்பட்ட மின்தூக்கியின் இயக்கத்தை தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பின் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, “தமிழகத்தில் கடந்த ஓராண்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டுள்ளது. சாதிக் கலவரமோ அல்லது மதக்கலவரமோ எதுவுமே நிகழவில்லை. எனவே தமிழக காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது

போதை பொருள் கடத்தல் குற்றவாளிகள் தமிழகத்திற்குள் வந்துள்ளதாகத் தகவல் கிடைத்தால் அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுகிறார்கள். சந்தேக நபர்களை கண்காணித்து வருகிறோம்” எனக் கூறினார்.

You might also like